சுங்கச்சாவடி கட்டணங்களுக்கான ஃபாஸ்டேக் முறையில், தற்போது ஆண்டு சந்தா திட்டம் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருமணம் ஆன புதுமண தம்பதிகள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேனிலவு செல்ல தயாராகி கொண்டிருந்தபோது, திடீரென புதுமணப்பெண் தனது காதலனுடன் ஓடி போய்விட்டார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர், "நல்லவேளை உயிர்பிழைத்தேன்" என்று பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அன்லிமிடெட்டாக பயணிக்கும் வகையில் புதிய வருடாந்திர பாஸ்டேக் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் மேம்பாலம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் திறக்கப்படாத நிலையில், இந்த வளைவு வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் தினமும் 3 லட்சம் பேர் பயன்படுத்தக்கூடியது.
மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்சி என்ற இளைஞரை அவரது மனைவி சோனம் மற்றும் அவரது காதலர், கூலிப்படையை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது "தேனிலவு கொலை" என பரவலாக அறியப்பட்ட நிலையில், இந்தக் கொலையில் கள்ளக்காதல் மட்டுமே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது.
இந்த ஆண்டு மாம்பழம் மொத்த விலையில் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பலர் மாமரங்களை வெட்டி சாய்ப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால், தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கிய முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதை மாற்றியமைத்துள்ளது. இனி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்திக்கு பதிலாக மற்றொரு இந்திய மொழியை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக இருக்கும் நிலையில், அதை ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சாலை ஓரத்தில் உள்ள ஒன்பது சிலைகளை இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை இனி எளிதாகப் பெறலாம்! குறிப்பாக, தொலைதூரப் பகுதிகளிலும், குறைந்த வசதிகளுடன் வாழும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக்கும் நோக்கில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சென்னையில் பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவையை தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு அவரின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமான அவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார்.
கேரளா மாநிலம் எர்ணாக்குளத்தில் திடீரென கடல்நீர் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை நேதாஜி சிலை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
சமீபமாக அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்தாகி வரும் நிலையில் இன்றும் பாலி சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதால், அந்த பெண்ணின் தாய், பாட்டி மற்றும் அவரது இரண்டு மகள்கள் என நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று திடீரென ஒரு சவரன் 800 ரூபாய்க்கு மேல் குறைந்தது. இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தையும், தங்க நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், இன்று ஒரு சவரனுக்கு 400 ரூபாய் மீண்டும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் தற்போது ஈரான் தனது முதல் ஹைபர் சோனிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் இருந்து வரும் சூழலில் இந்திய பங்குச்சந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் பெரிய அளவில் சரிவு இல்லை என்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த நிலையில், நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டொனால்ட் டிரம்ப்பின் குடும்ப நிறுவனம் 'டிரம்ப் மொபைல்' என்ற புதிய வயர்லெஸ் சேவையையும், ஸ்மார்ட்ஃபோன் பிராண்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ’படை தலைவன்’ திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பிறகு கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் ஆசிம் முனீர், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இன்று சந்திக்கவுள்ளார். ஜூன் 14 அன்று நடந்த அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு விழாவுக்கு முனீருக்கு அழைப்பு இல்லை என வெள்ளை மாளிகை மறுத்த சில நாட்களிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக பழைய படங்கள் ரி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் இடையே ஆதரவைப் பெற்று வருகின்றன. இதில் உச்சபட்ச வெற்றியைப் பெற்றது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம். கடந்த ஆண்டு இந்த படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான தக் லைஃப் படம் தோல்விப் படமாக அமைந்தது. சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்காத நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு ஃபோன் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வலுபெற்று வரும் நிலையில் ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. உலக நாடுகள் பலவும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும்போது ஈரானுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் எழுவது ஏன்?
வரும் ஜூலை 5ஆம் தேதி ஜப்பானில் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என பெண் சாமியார் பாபா வங்கா என்பவர் கணித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மதகுரு ஒளிந்திருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும், அவரை கண்டுபிடிப்பது என்பது ஒரு பெரிய இலக்கு அல்ல என்றும், ஆனால் இப்போதைக்கு அவரை கொல்லும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஆர்யாவுக்கு சென்னையில் ஐந்து ஹோட்டல்கள் இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் ஐந்து ஹோட்டல்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தந்தையின் பீடி பழக்கத்தால் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றிற்கான விதிமுறைகளில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே என்ற பகுதியில் 64 வயது நோயாளி அபிமான் கிர்தர் டயடேவை, ஆட்டோரிக்ஷாவிலேயே பரிசோதித்த டாக்டர் பிரபு அஹுஜா, 'இறந்துவிட்டார்' என அறிவித்து இறப்பு சான்றிதழையும் வழங்கினார். ஆனால், இறுதிச் சடங்கிற்கு தயாராகும்போது, டயடே மூச்சு விடுவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அறம் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் கோபி நயினார் இப்போது ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இடையிலான உறவு குறித்து ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. இந்த நிலைஇயில் மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி, ஒரே காரில் புறப்பட்டு சென்றது இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் அமெரிக்காவும் நேரடியாக களமிறங்கக்கூடும் என்ற பேச்சுகள் வலுத்து வரும் நிலையில், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பின்னர் சினிமா பார்வையாளர்கள் கணிசமானவர்களை ஓடிடி நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுத்துள்ளன. இதில் முன்னணியில் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, பலரது உயிரை பறித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. லண்டன் செல்லவிருந்த போயிங் விமானம், மருத்துவமனை உணவக கட்டிடத்தின் மீதும், பின்னர் மருத்துவர்கள் விடுதி மீதும் மோதி நொறுங்கியது.
பள்ளி சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய இன்னொருவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படும் தகவல் உசிலம்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.