அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு மாஸ் காட்சிகள் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் படத்தின் கதை அம்சம் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளில் இடம்பெறும் வேட்டி, சேலைகளில் அமைச்சர் காந்தி தொடர்ந்து ஊழல் செய்து வருவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் கைதாக போகும் திமுகவினரின் பட்டியலில் அமைச்சர் காந்தி முதல் இடத்தில் இருப்பார் என்று கூறியுள்ளார்.
டெல்லியில் அதிமுக அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மசோதாவை ஒரு சில ஆண்டுகள் நிறுத்தி வைத்தால், அந்த மசோதா செல்லாதவையாக ஆகிவிடுகிறது. அவ்வாறு செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது ஏன் என ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதிஎன்ற பகுதியில், 80 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.சமீபமாக தேசிய அளவில், மாநில அளவில் நடந்து வரும் அரசியல் நிலவரங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார். டெல்லியில் பாஜக வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மியை விட 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளை பெற்றது. காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாஜகவை வீழ்த்தி இருக்கலாம். இனியாவது இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றார்.
உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள நிலையில் ரயில் எஞ்சினை கூட விட்டு வைக்காமல் லோகோ பைலட் அறைக்குள்ளும் புகுந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பயணிகள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட மக்கள் நெரிசலுக்கு ஏற்ற போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையோடு செயல்பட்டு வருபவர் தனுஷ். தற்போது அவர் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா, ப்ரியா ப்ரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் என முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவருமே இளைஞர்கள்.
வேலூரில் ரயில் சென்ற பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகி ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை - திருப்பதி இண்டெர்சிட்டி ரயிலில் சென்ற ஆந்திராவை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணை ஒரு ஆள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று (09-02-2025) திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
யமுனையின் சாபத்தால் தான் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது என ராஜினாமா செய்ய வந்த டெல்லி முதல்வர் அதிஷியிடம் டெல்லி கவர்னர் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு பரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவிலை அபகரிக்க நடிகர் வடிவேலுவும், அவரது ஆதரவாளரும் முயற்சிப்பதாக கூறி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான அஜித்குமாருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். எனினும் அவர் தற்போது கார் ரேஸ், பைக் ட்ரெக்கிங் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் குறைவாகவே படங்களை நடித்து வருகிறார். இதனால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அஜித் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் அதற்காக காத்திருப்பதும், அப்டேட் கேட்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு சவரன் 64 ஆயிரத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நாளை (பிப்ரவரி 11) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட பல கோவில்களிலும் கொடியேற்றம் நடத்தப்பட்டு தைப்பூச விழா கடந்த ஒரு வாரமாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி கோவிலில் பக்தர்கள் பால்குடம், காவடி என எடுத்துக் கொண்டு கோவில்களுக்கு ஊர்வலமாக வரும் நிலையில் ஊரே திருவிழாக் கோலமாக காணப்படுகிறது.
இன்று வாரத்தின் முதல் நாளே, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவில் இருப்பதை அடுத்து, முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி தேர்தல் முடிவுகள் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் வேறு சில மாநிலங்களிலும் எதிரொளிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பீகார் மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜாஸ்வி யாதவ், இதை மறுத்துள்ளார்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, நடப்பு நிதியாண்டிற்குள் ஈ-ரிக்சா துறையில் காலடி எடுத்து வைக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா நூலகத்தில் தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இனி நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எளிதாக வாசிக்கலாம் என்று நூலகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, 14 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெயில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் அவர்களின் சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு இணையதளத்தில் வைரல் ஆன நிலையில், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கொடுத்த 305 ரன்கள் என்ற இலக்கை வெறும் 44.3 ஓவர்களில் எட்டி, இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து, இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 31 நக்சல்கள் பலியானதாகவும், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி செய்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டின் கல்வி நிதியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி உள்ளதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டி நான்கே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.
மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுவேந்திர அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோல்வி அடையச் செய்தது போல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் அதிஷி ராஜினாமா செய்து விட்டதாகவும், மாற்று அரசு பதவி ஏற்கும் வரை முதல்வர் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, 77 வயது மாமியாரை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் முன் வைத்த நிலையில், இது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, பிப்ரவரி 11ஆம் தேதி முதல் போராட்டம் நடத்துவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே, திருமணமான ஆறு நாட்களில் நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்த கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் 10 பேர் பயணம் செய்த சிறிய விமானம் ஒன்று நேற்று மாயமானதாக கூறப்பட்ட நிலையில், அந்த விமானம் கடலில் உள்ள பனி பாறையில் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
படிக்காத பாமர மக்களை மட்டுமின்றி, பட்டம் பெற்றவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட ஒரே அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும், அவர்களுடைய இரண்டு விசை படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரீபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 5 முதல் 10 ஆண்டுகள் கழித்து இடுப்பு வலி தோன்றும் என்றால், அதன் காரணமாக இடுப்பு எலும்பு மற்றும் குருத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படலாம். கூடுதலாக, அதிக உடல் எடை, கடுமையான உடல் உழைப்பு, வயதுக்கு ஏற்றாத உடற்பயிற்சிகள் ஆகியவையும் இடுப்பு வலிக்கு காரணமாக இருக்கலாம்.
திருவண்ணாமலையில் பிரபலமான அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலையே சிவனாக போற்றப்படும் காரணத்தால், கோவிலின் பின்புறத்தில் உள்ள அண்ணாமலையார் மலை பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. இந்த மலையை சுற்றி அமைந்துள்ள 14 கிலோமீட்டர் தொலைவுடைய கிரிவலப்பாதையில், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திபூர்வமாக கிரிவலம் செல்கின்றனர்.
தேர்தல் முடிவு ஏமாற்றம் தான் என்றாலும், பாஜகவுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும் என்று டெல்லி முதல்வர் அதிஷி பேட்டி அளித்துள்ளார்.
பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஷ்பேடு ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.
தலைநகர் டெல்லியில் ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காததால் தான் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது என்றும், பாராளுமன்ற தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், இந்நேரம் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் என்றும் தேர்தல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.