வருகிற ஆகஸ்ட் 10 அன்று நடைபெறவிருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட நடிகை ரவீனா தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இது பாமகவை தங்கள் கூட்டணிக்கு மறைமுகமாக அழைக்கும் செயல் என கருதப்படுகிறது.
மும்பையில், 12வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சன்னல் வழியாக எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்விகா பிரஜாபதி என்ற சிறுமி, செருப்பு வைக்கும் அலமாரியின் மீது அமர வைக்கப்பட்ட பின்னர், சன்னல் விளிம்பில் ஏறி அங்கிருந்து தவறி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல் எடையைக் குறைப்பதில் குறைந்த கொழுப்பு சைவ உணவு முறை மிக சிறந்த பலனைத் தரும் என புதிய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு, பிரபல மெடிட்டரேனியன் உணவு முறையுடன் ஒப்பிடப்பட்டது.
பிள்ளையார்பட்டிக்கு அப்பெயர் வரக் காரணம், இங்கு அருளும் கற்பக விநாயகர் தான். உலகின் ஆதி விநாயகர் வடிவங்களில் ஒன்றாக போற்றப்படும் இச்சிற்பம், இரண்டு கரங்களுடன் காட்சியளிக்கும் தனித்துவமானது. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகர் நின்ற கோலத்தில் இருக்க, இங்குள்ள விநாயகர் அமர்ந்த கோலத்தில், எந்தப் பிந்தைய சேர்க்கைகளுமின்றி அசல் வடிவில் உள்ளார்.
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் சூர்யாவின் 'கருப்பு' உட்பட சில முக்கியப் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்றிரவு 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்த மைல்கல்லை எட்டினார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பின்படி, சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் எஞ்சின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், ஒரு பெண் காவலர் தனது காதலன் வீட்டின் முன்பு தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததே இந்த விபரீத செயலுக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரப் பிரதேசத்தில், பிரபல நகைக்கடை ஒன்றின் மார்க்கெட்டிங் ஊழியர், சுமார் ரூ. 1.29 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் தலைமறைவாகி, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜகத்பூர் மாவட்டத்தில், ஒரு சிறுமி மூன்று ஆண்களால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமானதால், அந்த சிறுமியை உயிருடன் புதைக்க அந்த மூன்று ஆண்களும் முயற்சி செய்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து முன்வைத்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "பிரதமர் மோடிக்கு அவ்வளவு பெரிய சக்தி இல்லை; அவர் பெரிய விஷயமும் இல்லை. ஊடகங்கள் தான் அவரை புகழ்ந்து பேசி ஊதி ஊதி பெரிய ஆளாக்கிவிட்டன" என்று ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இளைஞர்களிடையே பிரபலமாக இருந்த ஆபாச, கவர்ச்சி தொடர்களை வெளியிடும் 24 ஓடிடி தளங்களை தடை செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் டிரைவர் ஜமுனா.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பணம் என்ற கோட்பாட்டையே மாற்றி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வருகின்றன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஒரு வரப்பிரசாதமாகவும், அதே நேரத்தில் சில சவால்களையும் கொண்டுள்ளன.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரான யாஷ் தயாள் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் ஈர்த்து இந்திய அணிக்குத் தேர்வானார். முதலில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தார். இந்நிலையில் அவர் மேல் ஒரு பெண் பாலியல் புகார் சுமத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கும் நிலையில், அவரது வருகை தமிழகத்தின் பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதுகுறித்து பேசியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிரதமர் மோடி வருகைக்கு பிறகு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என தெரிய வரும் என பேசியுள்ளார்.
இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இதுவரை இயக்கி இருப்பது ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. பின்னர் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் ‘நினைவோ ஒரு பறவை’ என்ற திரைப்படம்தான். ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை உலகில் உள்ளவர்களே அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். மொத்தத்தில் அறிவுஜீவிகளுக்கான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைபாட்டை பிரான்ஸ் அறிவித்திருப்பது இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜூலை 26ஆம் தேதி தமிழகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ள நிலையில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இதனால் பிரதமர் வரும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க தேதி கேட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கும் வகையில், "சொன்னீங்களே செஞ்சீங்களா" என்ற தலைப்பிலான ஒரு வில்லுப்பாட்டு வீடியோவை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த வில்லுப்பாட்டு வீடியோவை வெளியிட்டார்.
பவன் கல்யாண் நடித்து வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ஹரிஹர வீரமல்லு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இங்கிலாந்துக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஒரு தேநீர் கடையில் இந்திய தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீரை குடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும், அன்றைய தினம் பூமி ஆறு நிமிடங்கள் இருளில் மூழ்கும் என்றும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என நாசா விளக்கம் அளித்துள்ளது.
கேரளாவில், சௌமியா என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று, கண்ணூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி கோவிந்தசாமி, ஒரு பள்ளத்தில் ஒளிவதாக நினைத்து கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய சில மணி நேரங்களிலேயே அவர் மீண்டும் பிடிபட்டார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிவம் என்ற இளைஞர், தனது கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டு நாட்களாக சடலத்துடன் அதே வீட்டில் வசித்தது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன், சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
ஆடி வெள்ளி கிழமைகளில் அம்மனை பூஜித்து 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தை கூறுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம்!
அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுவது ஆடி மாதம். இந்த ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை மனமுருக வேண்டி வரும் பக்தர்களுக்கும் அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவ்வாறான ஆடி மாதத்தில் பெண்கள் அவசியமாக விரதமிருந்து வழிப்பட வேண்டிய நாளாக கருதப்படுவது ஆடிப்பூரம் நன்னாள்.
தமிழ் வனிகா சினிமாவின் மைல்கல் படம் என்றால் அது ரஜினி நடித்த பாட்ஷா என்று சொல்வதில் மிகையில்லை. பாட்ஷாவுக்குப் பிறகு அதுபோல பல படங்கள் வெளியாகின. இந்தப்படம் அமிதாப் நடித்த இந்திப் படத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக இயக்கி ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பெங்களூரு மற்றும் தாம்பரம் இடையே புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று சரிந்ததை போலவே, இன்றும் சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்றைய சரிவை தொடர்ந்து இன்றும் புள்ளிகளை இழந்தது.
தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.1,000 குறைந்த நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.45 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் வித்தியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில், நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 17 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது தமிழகத்தில் உயிரோடிருக்கும் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார். வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என அடுத்தடுத்து அரசியலில் ஏற்றம் கண்டவர் ராமதாஸ். ஒரு காலத்தில் அவர் தமிழகத்தின் ஆட்சியையே நிர்ணயிக்கும் சக்தியாகவும் உருவெடுத்தார்.
தெலங்கானா மாநிலம் அல்லிகுடெம் கிராமத்தில், கனமழை காரணமாக ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் தற்காலிக சாலை மூழ்கியதால், பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களால் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் தீரன், வலிமை, துணிவு என அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.
சோழப்பேரரசன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரையை கொண்டாட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
கூகுள் மேப் வழிகாட்டியை நம்பி ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்துள்ள நிலையில், தற்போது கூகுள் மேப் மீண்டும் தவறான வழியை காட்டியதால் கார் ஓடைக்குள் கவிழ்ந்த சம்பவம் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பதவியில் இருக்கும் பிரதமராக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னர், இந்திரா காந்தி 4,077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்து வந்த நிலையில், இன்றுடன் நரேந்திர மோடி 4,078 நாட்கள் பிரதமர் பதவியின் பெருமையை அடைந்துள்ளார்.
நாகப்பட்டிணத்தில் நான்காவது ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதனுடன் ஏராளமான போட்டிகள், கலைக் கண்காட்சிகளை இணைத்து உண்மையான திருவிழா அளவிற்கே பிரம்மாண்டம் செய்துள்ளனர்.
இன்று பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இதனால் அடுத்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.
தமிழ் சினிமா ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து வைத்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90 களிலும் வெளியான அவரின் ஆக்ஷன் படங்கள் இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.