ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறும் நிலையில் இனி சிஎஸ்கே கேப்டனாக தோனி தொடர்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான நிலையிலேயே விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மும்பையை வென்ற பிறகிலிருந்து இதுவரை ஒரு வெற்றியும் பெறவில்லை
டீ குடிப்பது மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தரும். நாள் முழுவதும் ஏற்படும் சோர்வை குறைக்க பலரும் டீயை ஆர்வமுடன் அருந்துகிறார்கள். சிலர் ஒவ்வொரு சிப்-யையும் ரசித்து பருகுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவ விழா இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழா கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.
டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ நிலையத்தின் கேட் நம்பர் 2 இன்று பொதுமக்கள் பயணத்திற்கு அனுமதியில்லை என்றும், தற்காலிகமாக மூடப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட ராணா இன்று நள்ளிரவில் இந்தியா வர உள்ளார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பெய்த கன மழையுடன் கூடிய புயல் காரணமாக நாளந்தாவில் பழமையான ஆலமரம் கோயில் மீது விழுந்து பல உயிரிழப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தமன்னா தற்போது பிசியாக இல்லை என்றாலும், தன்னுடைய ஒரு பாடல் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடனமாடிய ‘காவாலா’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த பாடலின் வெற்றி, படத்திற்கே ஓர் அசாதாரண வசூலை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தர இருக்கின்ற நிலையில், அவரது வருகைக்கு முன்பே சில முக்கிய சந்திப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக எம்பி கல்யாணசுந்தரம் என்பவர், தனது உதவியாளர் மூலம் செய்தியாளர்களுக்கு துண்டு சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்து, அந்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று கூறியது, செய்தியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பாஜகவின் தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் இருந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு அந்த அணி எப்போதுமே பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஒரு சமநிலையைப் பேணாததேக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பங்க் மேனேஜரை, இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதீஷ் குமாருக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர், தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண் தனது அண்ணியை பற்களால் கடித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இதற்கு நீதிபதி அளித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவி இன்னொரு வாலிபரை காதலிக்கிறார் என்பது தெரிந்து, அவரது எண்ணம் போலவே அவரது காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவருக்கு, அவரது கிராமத்தில் உள்ளவர்கள் "தியாகி" பட்டம் சூட்டி உள்ளனர். இது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை சென்னை வருகிறார் என்பதும், அவர் பாஜக தலைவர்களை சந்தித்து அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
நாமக்கல் காங்கிரஸ் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஐபிஎல் மைதானத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சாம் கரண் சமோசா விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் பாசிட்டிவ் ரிவ்யூஸ் சூழ்ந்திருக்க, அஜித் மற்றொரு கார் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
கோவையில் தேர்வு எழுத சென்ற பழங்குடி மாணவியை மாதவிடாய் காரணமாக வெளியே அமர வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.கோவை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பழங்குடி மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். தற்போது பள்ளித் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் மாணவிக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே வைத்து தேர்வு எழுதும்படி செய்யப்பட்டார்.
’நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் பாடினார். ஆனால் தற்போதைய நிலையில் ‘நீரின்றி அமையாது உறவு’ என்ற வகையில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.மத்திய பிரதேசம் - சத்தீஸ்கர் எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் திண்டோரி. இங்குள்ள தேவ்ரா என்ற கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்கு மொத்தமே அந்த கிராமத்தில் ஒரேயொரு குடிநீர் குழாய்தான் உள்ளது. இதனால் தண்ணீர் பிடிக்க காலை முதல் இரவு வரை அங்கு கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கிறது.
ஜியோமி நிறுவனம் தங்களுடைய புதிய ஸ்மார்ட் டிவி மாடலான QLED X Pro ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த டிவி ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
வக்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நாமக்கல் எம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் ஜெய்ஸ்வால் சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார் .
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித். அவர் தன்னுடைய நிறுவனம் சார்பில், அசுரவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்ககியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
RCB vs DC: நடப்பு ஐபிஎல் சீசனின் அதிரடியாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையே நடக்க உள்ள இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.நடப்பு சீசனின் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி வென்று 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் அதே 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று இரு அணிகளில் குஜராத்தின் நெட் ரன் ரேட்டை தாண்டி வெற்றி பெறும் அணி புள்ளி வரிசையின் முதல் இடத்தை பெறும்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கவர்னருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்'' என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டுள்ளது குறித்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாமகவில் கட்சி நிறுவனரான ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில், தற்போது 2026 கூட்டணி குறித்து இருவருக்கிடையே வார்த்தை மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது கட்சி நிறுவனர் ராமதாஸ், தானே தலைவர் பதவியையும் வகிக்கப்போவதாகவும், இனி அன்புமணி செயல் தலைவராக நீடிப்பார் என்றும் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Good Bad Ugly Review: அஜித் நடித்த குட் பேட் அக்லி என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
போதைப் பொருள்கள் விற்பவர்கள் பத்தில் ஐந்து பேரை Grindr என்ற செயலியை பயன்படுத்துவதால், அந்த செயலியை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில், கிரிக்கெட் போட்டி 128 ஆண்டுகள் கழித்து மீண்டும் இடம் பெறுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. எனவே, யாருடன் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் கட்சிகள் இப்போதே யோசிக்கவும், காய்களை நகர்த்தவும் துவங்கிவிட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஏனெனில், அவர் முதல்வராக நீடிக்க பாஜக மேலிடம் உதவியது.
இனி நானே பாமகவின் தலைவர் என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில் இதற்கு அன்புமணியின் ரியாக்ஷன் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த சில காலமாகவே முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் புதுச்சேரியில் நடந்த பாமக கூட்டத்தில் இருவரும் வெளிப்படையாக அதை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம், அரண்மனை 5, சர்தார் மற்றும் அகத்தியா ஆகிய படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ மற்றும் ‘சித்திரி புத்திரி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்கான கதையை பிற படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தபோதும் தொடர்ந்து அவரது படங்கள் ஹிட்டாவதால் முன்னணி நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க விரும்புகின்றனர்.
உலகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தும் நிலையில் அதில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.உலகம் முழுவதுமே தற்போதைய இளம் தலைமுறை இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதற்காக ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வது தொடங்கி, இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர்களை நம்பி பணமோசடியில் சிக்குவது உள்ளிட்டவை தொடர் கதையாக இருந்து வருகின்றன.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் 150 ரூபாயும் ஒரு சவரன் 1200 ரூபாயும் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷின் 56வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் டெல்லிக்கு வர இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் 13 வயது சிறுமிகள் இருவரை 14 பேர் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் எமோஷனலாக தனது எக்ஸ் பக்கத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை தற்போது பார்ப்போம்.