கோழி இறைச்சியை விடவும் சுவையிலும், சத்திலும் மேம்பட்டது காடை இறைச்சி. சித்த மருத்துவத்தில் "கட்டில் கிடப்பார்க்கு காட்டில் படும் காடை" என்ற பாடல், நோயால் உடல் இளைத்தவர்கள் காடை இறைச்சியுடன் சோறு உண்டால் வலிமை பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறது. ஒரு தமிழ் நூலும் இதனை உறுதிப்படுத்துகிறது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த வண்ணமயமான நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் அளித்த நகை திருட்டு புகாரின் அடிப்படையில், அக்கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞரை, திருபுவனம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று கடுமையாக தாக்கி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த லாக்-அப் டெத் சம்பவத்தை தொடர்ந்து, தொடர்புடைய 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் அஜித் ஒரு படத்திற்குக் கால்ஷீட் கொடுத்தால், பல முன்னணி நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, 'குட் பேட் அக்லி' என்ற வெற்றி படத்திற்கு பிறகு
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்திற்காக தனுஷ் ராயல்டி கேட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தியால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் எதிர்பாராதவிதமாக சந்தித்தது, தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு, இருவரும் இணைந்து ஒரு புதிய பட உருவாக்கத்திற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், ஜூலை 8-ஆம் தேதி சந்தையில் அறிமுகமாக உள்ளன. நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், உள்நாட்டுத் தயாரிப்பாக மட்டுமன்றி, உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
இந்திய ரயில்வே நாளை அதாவது ஜூலை 1 முதல் ரயில் பயண கட்டணங்களை உயர்த்தவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகம் நீண்ட நாட்களாக கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட வந்த ராஜா, சோனா தம்பதியில் ராஜா சோனாவால் கொல்லபப்ட்ட சம்பவத்தை அடுத்து மேகாலயாவில் புதிய பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வழிகாட்டிகள் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் டெல்லி பிரீமியர் லீக் ஏலத்தில், கிரிக்கெட் உலகின் சில பிரபலமான குடும்பங்களை சேர்ந்த இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். விராட் கோலியின் அண்ணன் விகாஸ் கோலியின் மகன் ஆர்யாவீர் கோலி மற்றும் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யாவீர் சேவாக் ஆகியோர் ஏலப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ. தொலைவில், ரூ.100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் சாலையில் நடுவில் உள்ள மரத்தை கூட எடுக்காமல் சாலை போட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட வினோத் காம்ப்ளி, உடல்நல குறைபாடுகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய பால்ய நண்பரான காம்ப்ளி, இந்தியாவுக்காக 104 ஒருநாள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
பஹல்காம் சுற்றுலா தலத்தில், ஒரு ஹோட்டல் அறையில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது.
கிரகநிலை:ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகநிலை:களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ், கேது - சுக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
கிரகநிலை:அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், குரு - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் செவ், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.
சென்னையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் அடுத்த 2 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரின் பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள முக்கிய சாலையான டிமான்டி சாலைக்கு, மறைந்த பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் நடைமுறை, நாளை முதல் அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. எனவே, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காத பயணிகள், உடனடியாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் தங்கள் ஆதார் தகவல்களை பதிவேற்றுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
சிவகங்கையில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற நபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தில் சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். அஜித்தை வைத்து அதிகப் படங்கள் இயக்கிய இயக்குனர் என்றால் அது சரண்தான். இவர்கள் கூட்டணியில் ‘காதல் மன்ன’, அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார்கள்.
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
தமிழ் சினிமாவில் நூற்றுக் கணக்கான படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை மன்னர் என்ற பட்டத்தைப் பெற்றவர் எம் எஸ் விஸ்வநாதன். 1950 களில் இசையமைக்க தொடங்கிய அவர் அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி, தனது கவனத்தை கார் பந்தயங்களில் முழுமையாக செலுத்தி வருகிறார். 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சில மாதங்களுக்கு கார் பந்தயங்களிலேயே ஈடுபடப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் முதல்வர் மாற்றம் குறித்த குரல்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே எழ தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது என்ற விவரங்களை காணலாம்.
பெரும் எதிர்பார்ப்போடு பலரும் காத்திருந்த ஸ்குவிட் கேம் 3 நெட்ப்ளிக்ஸில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கேள்விக்குறியே!
திருப்பூர், குப்பாண்டம்பாளையத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவுத் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகள், ஐந்து பணிமனைகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் 10 வயது சிறுவன் ஒருவன், மழையில் விளையாட வெளியே செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், தனது தந்தையால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டான். இந்தக் கொடூச் சம்பவத்தில் ஈடுபட்ட தந்தையை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தனர்.
கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் ஈட்டினர். ஆனால், இந்த வாரத்தின் முதல்நாளான இன்று பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.2,500-க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
மேஜர் லீக் கிரிக்கெட் 2025 தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஒரு அற்புதமான சதம் அடித்து பல சாதனைகளை படைத்து வரலாறு உருவாக்கியுள்ளார்.
சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸானது. இந்த படத்துக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பான ரூ. 66.6 லட்சத்தை, டேட்டிங் செயலி மூலம் சந்தித்த ஒரு பெண்ணால் நிகழ்த்தப்பட்ட ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி இழந்துள்ளார்.
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு தனுஷ் தரப்பில் எதிர்ப்பு வந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலடத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே, பாதி சிதைந்த நிலையில் ஒரு சிறுமியின் உடலும், ஒரு இளைஞரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய எல்லைக்குள் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து பாகிஸ்தான் சிம் கார்டு, அடையாள அட்டைகள், ஒரு மொபைல் போன் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு, "எம்.ஜி.ஆர்-ஐயே பார்த்த கட்சி தி.மு.க." என்று மறைமுகமாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யை தாக்கிப் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்த படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் ஜூன் 5ம் தேதி வெளியாகி படுதோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “முத்த மழை” பாடலை தீ பாடியுள்ளார். ஆனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த பாடலை சின்மயி பாடினார். மேடையில் பாடிய அவரின் இந்த வெர்ஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
திருப்பூரில் தொழில் அதிபர் ஒருவரின் மகளுக்கு அண்மையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்த நிலையில் இரண்டரை மாதங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.