திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவின் கொடியேற்ற நிகழ்வு செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று, ஆந்திர மாநில அரசு சார்பில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்குப் பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்க இருக்கிறார்.
பொதுவாக, மல்லிகைப்பூ என்றால் அதன் நறுமணமும், பெண்களின் கூந்தலுக்கு அது தரும் அழகும் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், இந்த பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்கு தெரியாது. முறையாக பயன்படுத்தினால், இது பல உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். மல்லிகைப்பூவின் சில முக்கிய ஆரோக்கியப் பயன்களை இங்கே காணலாம்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
பெங்களூரு மெட்ரோவில் சூட்கேஸ் எடுத்து சென்ற பயணி ஒருவரிடம் ரூ.30 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக, பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை பலவும் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. 'வார் 2' மற்றும் 'கூலி' போன்ற அதிகமான பட்ஜெட்டில் உருவான பிரம்மாண்ட படங்கள் ஒருபுறம், ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான 'மகா அவதார் நரசிம்மா' மறுபுறம் என பல ரக படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
டெல்லியில் தெருநாய்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள், விலங்கு ஆர்வலர்கள் குழுவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, சுமார் 20 பேர் கொண்ட நாய் பிரியர்கள் குழு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்பி கனிமொழி, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் நிர்மலா சீதாராமனிடம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளதhு.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினால் அவர்களுக்கு, 'ஷ்ரமஸ்ரீ' என்ற திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு அல்லது வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மே.வங்கத்தில் இருந்து வெளிமாநிலம் சென்றவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பலர் நடித்துள்ள Thama படத்தின் டீசர் வெளியாகி பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.
துபாயில் நடைபெற உள்ள ஆசியக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
இந்திய ரயில்வே, விமான நிலையங்களை போன்றே ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகளின் எடை மற்றும் அளவை கட்டுப்படுத்த புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது.இதன் மூலம், ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு, விமான நிலையங்களை போன்ற ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழை படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ராஜஸ்தானில் சில தெரு நாய்கள் சேர்ந்து 5 வயது சிறுவனை வேட்டையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் அடுத்தடுத்து விஜய்யை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஷாருக் கானை வைத்து ‘ஜவான்’ என்ற பேன் இந்தியா பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இதனால் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனரானார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடும் என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆலந்தூர் பகுதியில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள ஒரு சிறுவனை வெறி கொண்டு தெருநாய்கள் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு வணிக இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்திருக்கும் உயரம் அளப்பரியது. தனது பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். முன்னணி நடிகர்கள் இல்லாமல் திரைக்கதையின் பலத்தால் உருவாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைவரான நடிகர் விஜய், கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்காக நேற்று இரவு மதுரைக்கு வருகை தந்தார். இந்த மாநாடு, நாளை மறுதினம் (ஆகஸ்ட் 21) மதுரை அருகே உள்ள பாரப்பத்தி கிராமத்தில் நடைபெற உள்ளது.
வேலூரில் பிரச்சாரக் கூட்டத்தின் நடுவே புகுந்த ஆம்புலன்ஸை எடப்பாடி பழனிசாமி எச்சரித்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம், இதற்காக எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ’விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டதாக, ஏதாவது ஒரு சம்பவம் உண்டா என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள 'மனுஷி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், படத்தை நானே நேரடியாக பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணியில் இருந்து முன்னாள் நீதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான புதிய வழித்தடத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) காலமானார். அவருக்கு வயது 80. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே, பைக் ஓட்டும்போது ரீல்ஸ் எடுத்த 17 வயது சிறுவன், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார்.
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த உரங்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றிற்கு சீனா விதித்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றுள்ளது.
அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ காப்பீட்டிற்கான ஜிஎஸ்டியை குறைக்க அல்லது ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக, பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த 11% வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த வரி விலக்கு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை, 42 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பண நோட்டுகள் திரும்பவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை, இன்றும் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ரூ.74,000-க்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவு, தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டங்களில், பொதுமக்கள் மத்தியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு தனது கூட்டங்களில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
அசாம் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினருக்கு சொந்தமான சுமார் 8.10 கோடி சதுர அடி நிலத்தை மகாபால் சிமெண்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கிய அசாம் அரசின் முடிவுக்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலம் தரிசு நிலம் என்றும், சிமெண்ட் ஆலைக்கு அது அவசியம் என்றும் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்திய சினிமாவில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் பாணியில் படம் எடுக்கும் நிறுவனம் ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’. அந்த நிறுவனம் வரிசையாக சாகச துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் வகையிலான படங்களைத் தயாரித்து வருகிறது. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸாகி வெற்றி பெற்ற வார் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரித்துள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு 2023 ஆம் ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. அந்த ஆண்டில் அவர் நடித்த பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ஹிட்டாகின. ஹாட்ரிக் கொடுத்த ஷாருக் கான் அடுத்து ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க முக்கிய வேடங்களில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் மற்றும் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் ஆகியோர் நடிக்கின்றனர்.
வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்துள்ளதை தொகுதி வாரியாக அம்பலப்படுத்துவேன் என ராகுல்காந்தி பேசியுள்ளார்.
வாரத்தின் முதல் நாளான நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்த இந்திய பங்குச்சந்தை, இன்றும் தொடர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே சமயம், எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு தவணாகிரே என்ற பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமி தெரு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவுடம் வர்த்தகம் செய்யும் சீனாவிற்கு வரி விதிக்காதது குறித்து அதிபர் ட்ரம்ப் மழுப்பலான விளக்கத்தை அளித்துள்ளார்.