Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பேர வர்த்தகத்தில் முன்னேற்றம்!

Webdunia
தேசிய பங்குச் சந்தையில் முன்பேர வர்த்தக பிரிவில் செப்டம்பர் மாதத்திற்கான நிஃப்டி குறியீட்டு எண் பிரிமியம் 13.40 புள்ளிகளாக அதிகரித்தது. இது முன்பு 8.30 புள்ளிகளாக இருந்தது. முன் பேர வர்த்தகத்தில் புதிதாக 8.49 லட்சம் பங்குகளுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் புதிதாக ரூ.954 கோடி மதிப்பிற்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முன்பேர சந்தையில் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.72,762 கோடியாக அதிகரித்துள்ளது.

நிஃப்டி கால் ஆஃப்ஷனில் புதிதாக 20.83 லட்சம் பங்குகள் இணைந்துள்ளன. புட் ஆஃப்ஷனில் 4.56 லட்சம் பங்குகள் இணைந்துள்ளன.

இதில் அதிக அளவு மதிப்பு உயர்ந்த பங்குகள் ஆக்ஸிஸ் வங்கி 43%, பாரத் பெட்ரோலியம் 27%, எஸ்ஸார் ஆயில் 18%, இந்தியாபுல் ரியல் எஸ்டேட் 17%, டாடா ஸ்டீல் 15%.

மதிப்பு குறைந்த பங்குகள் பர்ஸ்ட்சோசர்ஸ் சொல்யூஷன் 14%, டிஸ் டி.வி இந்தியா 11%, நாகர்ஜூனா கன்ஷ்ட்ரக்சன் கம்பெனி 10%, ஓரியன்ட் பாங்க் ஆப் காமர்ஸ் 8%.

ஆதாரம்- ஷேர்கான் டாட் காம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

வாரிசு அரசியல் பற்றி யார் பேசலாம் - பேசக்கூடாது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்..!!

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

Show comments