Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூருக்கு உதயநிதி ஏன் வரவில்லை: நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி..!

Advertiesment
கரூர்

Siva

, ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (09:38 IST)

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு க ஸ்டாலின் வந்திருந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏன் வரவில்லை என அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

 
சனிக்கிழமை பேரணிகளுக்கு மட்டும் தான் வருவார் விஜய்" என கிண்டல் செய்தார் உதயநிதி. ஆனால், உதயநிதி சனிக்கிழமைகளில் வெளியே வருவதில்லை எனும் உண்மைதான் என்ன? சனிக்கிழமைகள் துணை முதல்வருக்கு விடுமுறை நாளா? ஓய்வுநாளா? இல்லையெனில் உல்லாசத்திற்கான நாளா?
 
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே, முதல்வரான தந்தை செய்தி கிடைத்தவுடனே சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார். ஆனால் மகன், அதாவது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், ஏன் கரூர் வரக்கூடாது?
 
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி "முதலைக் கண்ணீர்" விடுகிறார்; அன்பில் மகேஷ் கூட அதேபோன்று. அதே நேரத்தில், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நபராக கருதப்படும் கோயம்புத்தூரை சேர்ந்த வைஷ்ணவியும் நன்றாக திட்டமிட்டு சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.
 
இந்தச் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, உதயநிதி ஸ்டாலின் வந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. ஏன்? திமுக அரசின் மோசமான நிர்வாகத்தையும், பழிவாங்கும் அரசியல் தந்திரங்களையும் பார்த்தபோது உங்களுக்கு (உதயநிதிக்கு) குற்ற உணர்ச்சி உண்டாகுகிறதா?
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க அரசியலுக்கு செட்டாக மாட்டீங்கன்னு விஜய்கிட்ட சொன்னேன்! - சர்கார் பட நடிகர் பதிவு!