தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி) நியமிக்காதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ல் ஓய்வு பெற்ற பிறகு, டி.ஜி.பி. நிலையிலான ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமன் சட்டம்-ஒழுங்கு பிரிவின் பொறுப்பு டி.ஜி.பி.யாகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
டி.ஜி.பி. நியமன நடைமுறையின்படி, மாநில அரசு அனுப்பிய தகுதிப்பட்டியலில் இருந்து வெங்கட்ராமனை விட மூத்த அதிகாரிகளின் பெயர்களை யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளதாகவும், அந்த பட்டியலை மாநில அரசு ஏற்காததாலேயே நிரந்தர நியமனத்தில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
யு.பி.எஸ்.சி. பரிந்துரையின் அடிப்படையில் டி.ஜி.பி.யை நியமிக்க தவறியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.