Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

23 மாவட்டங்களில் மதியம் முதல் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Advertiesment
Meteorological Department

Prasanth K

, வியாழன், 6 நவம்பர் 2025 (12:49 IST)

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியால் தமிழக மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு சற்று இடைவெளி விட்ட மழை தற்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் இன்று 23 மாவட்டங்களில் மதியம் முதலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், சேலம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, தென்காசி, திருநெல்வேலி கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

திருவள்ளூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக - தவெக இடையேதான் போட்டி! அதிமுகலாம் ரேஸ்ல இல்ல! - விஜய் பக்கம் சாயும் டிடிவி தினகரன்!