Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓதுவார் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பு!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:55 IST)
தமிழக அரசால் நடத்தப்படும் உதவித் தொகையுடன் கூடிய ஓதுவார் பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்பில் சேருவதற்கு தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் செயல்படும் ஓதுவார் பயிற்சி நிலையத்தில், ஓதுவார் பணிக்கு 3 ஆண்டு காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தகுதிகள்: ஓதுவார் பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்துவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8- வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2008-தேதிப்படி 14 வயது நிரம்பியவராகவும், 20 வயதுக்குட்பட்டவராகவும் இருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர் ஆன்மீகம், இசை ஆகியவற்றில் ஆர்வம் உடையவராகவும், மது, புலால் உண்ணாதவராகவும் இருத்தல் வேண்டும்.

உதவித் தொகையுடன் பயிற்சி: ஓதுவார் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பயிற்சி நிலையத்திலேயே தங்க வேண்டும். அவர்களுக்கு இலவச உணவு, சீருடை, உறைவிடம் மற்றும் பயிற்சிக்கால உதவித்தொகை ஆகியன வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், தந்தை/ காப்பாளர் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து வரும் 29.09.2008 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை 'இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments