Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (16:21 IST)
புதிதா க அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களையக்கோரி நாட்டில் உள்ள 13 ஐஐடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1,500 பேராசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐஐடி, ஐஐஎம்) ஆசிரியர்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய பரிந்துரையில் பதவி உயர்வு, திறமை அடிப்படையிலான ஊக்கத் தொகை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவை வழக்கத்திற்கு மாறாகவும், ஐஐடி ஆசிரியர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது என்று ஐ.ஐ.டி. ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.தேன்மொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும் நாளை (24ஆம் தேதி) ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

Show comments