தமிழ ். வெப்துனிய ா. காம ்: தமிழக அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் விபத்தில் இறந்துவிட்டார். இந்த நிகழ்வு தொடர்பான காவல்துறை அறிக்கையை பார்த்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஜோதிட ரீதியாக நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்.
ஜோதி ட ரத்ன ா முனைவர ் க.ப. வித்யாதரன ்: தலைமை வகித்துள்ள தமிழக முதல்வருக்கு சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். அவருக்கு தற்போது ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. ஏழரைச் சனி நடந்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர் தேர்தலைச் சந்தித்தார்.
சனி எப்பொழுதுமே அள்ளிக் கொடுக்கக் கூடாது, கிள்ளிதான் தரவேண்டும். சனி அள்ளிக் கொடுத்தால் கொள்ளி வைக்கும் என்று சொல்வார்கள். அதாவது மிகப்பெரிய அளப்பரிய அளவிற்கு ஒரு ராட்சத வெற்றியைப் பெற்றார்களே, அதற்குப் பதிலாக இன்னொரு பக்கம் பின் விளைவுகளை சனி கொடுக்கும்.
இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தும் கொஞ்சம் வருத்தமான சம்பவம் நடந்தது என்று சொல்வார்களே, அதுமாதிரிதான் சனி கொடுப்பார். அழுது கொண்டே சிரிப்பது, சிரித்துக் கொண்டே அழுவது போன்றவற்றை கொடுப்பதெல்லாம் சனியினுடைய தாக்கம்தான். அதனால்தான் இதுபோன்ற சில பாதிப்புகளைக் கொடுக்கிறது.
அடுத்தடுத்து கூட சில பாதிப்புகள் வருவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியப் பொறுப்பு, பதவி வகிப்பவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு, மருத்துவமனையில் அனுமதிப்படுவது போன்று அடுத்தடுத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.
டிசம்பர் வரைககுமே ஏழரைச் சனியினுடைய உக்கிரம் அதிகமாக இருக்கும். அதுவரைக்கும் சனியினுடைய தாக்கம் இருக்கும்.