Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2012 (15:22 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அரவாணிகளிடம் ஆசி பெறுவதை நல்லதாகச் சிலர் கருதுகிறாரகள். இது சரியா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பழைய நூலான சகாதேவ மாலை என்று ஒரு நூல் இருக்கிறது. அது தற்போது எங்குமே கிடைப்பதில்லை. என்னுடைய தாத்தா வைத்திருந்தார். அதில், அரவாணிகள் புதனுடைய அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஈறு நிலை எனப்படும் அர்த்தணாரீஸ்வரர் நிலை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் பார்த்தால், அரவாணிகளை பலி கொடுத்து கிருஷ்ணர் சிலவற்றை செய்ததாக இருக்கிறது. சிலரையெல்லாம் அழிப்பதற்கு அரவாணிகளால் முடியும். சில அரக்கர்கள் ஆணாலும், பெண்ணாலும் அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்குவார்கள். அதுபோன்றவர்களை அரவாணிகளை வைத்துதான் செய்ய முடியும். யாராலும் செய்ய முடியாத சில விஷயங்களை அரவாணிகளால் செய்ய முடியும்.

சில கடைகளில் காசு வாங்கிக் கொண்டு திருஷ்டி சுற்றி, கையை கீழே குத்தி மளமளவென்று திருஷ்டி முறித்து ஆசிர்வாதம் செய்வார்கள். இதுபோன்று செய்வதால் கண் திருஷ்டி, ஓம்பல் விலகுவதாக கருதுகிறார்கள்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments