Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நீடிக்க வாய்ப்புள்ளது - மழைராஜ்

Webdunia
சனி, 31 மார்ச் 2012 (20:53 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழ்நாட்டில் மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

கடந்த மார்ச் 26ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் மார்ச் 28 முதல் 30 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். ஒரு நாள் முன்னதாக மார்ச் 27 முதல் தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, தேனி, நீலகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், உட்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொண்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தற்போது பெய்துவரும் மழை ஏப்ரல் 2ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

நிலநடுக்க தேதி கணிப்பின்படி ஏப்ரல் 1, 7 ஆகிய தேதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

Show comments