Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலத்த மழை தொடர வாய்ப்புள்ளது - மழைராஜ்

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2010 (18:47 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் பு‌திதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழ்நாட்டில் பலத்த மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

வெப்துனியாவிற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நாகையை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் டிசம்பர் 6 வரை கடலூர், புதுச்சேரி உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகை மற்றும் கடலூரை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் டிசம்பர் 7ஆம் தேதி மாலை முதல் 9ஆம் தேதி இரவு வரை கடலோர மாவட்டங்களிலும், வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மழை தேதி கணிப்பின்படி டிசம்பர் 14 அல்லது 15 முதல் 17 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். டிசம்பர் 17க்கும் பிறகு மழை பெய்யும் வாய்ப்பு குறையும். கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி டிசம்பர் 9ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

Show comments