வளரும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 29-ந் தேதி செவ்வாய்க்கிழமை (15.12.2009) அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம், சூலம் நாம யோகம், நாகவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனில்லாத சித்த யோகத்தில் புதன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய உதயம் புக இரவு மணி 11.07க்கு மகரத்திலிருந்து ஸ்திர வீடான கும்பத்திற்குள் குரு பகவான் நுழைகிறார். கும்பத்தில் 21.11.2010 வரை குருபகவான் நீடிப்பார்.