Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மிதுனம்

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மிதுனம்
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:12 IST)
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், போராட்டகளும், புரட்சிகரமான சிந்தனைகளும் கொண்டவர்கள். உங்களின் யோக வீடான 9-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால் தொட்டது துலங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிரபலங்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். விலகி நின்ற உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். கஷ்டப்பட்டு உழைத்த காசையும், வெளியில் கொடுத்து ஏமாந்தீர்களே! இனி அந்தப் பணம் கைக்கு வரும். தவறு செய்யாமலேயே தண்டனை அனுபவித்தீர்களே! அந்த அவல நிலை மாறும். சில வி.ஐ.பி.கள் உங்களுக்கு உதவுவதாக சொன்னார்கள். ஆனால் நீங்கள் நேரில் சென்று உதவி கேட்ட போது ஒதுக்கித் தள்ளினார்களே! இனி அவர்கள் பார்த்து வியக்கும்படி ஏதேனும் சாதிப்பீர்கள்.

15.12.2009 முதல் 3.5.2010 முடிய உள்ள காலக்கட்டங்களில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். அதிகமாக உழைத்தும், சேமிக்க முடியாத படி செலவுகள் தானே இருந்தது இனி அந்த அவல நிலை மாறும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பாகப்பிரிவினை-சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் சுமூகமாக முடியும். நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர்கள்.

குடும்பத்தினருடன் கொஞ்சம் ஒதுங்கியிருந்தீர்களே! இனி ஒற்றுமை பிறக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். சின்ன சின்ன வேலைகளை முடிப்பதில் கூட சிக்கல்கள் வந்ததே! இனி முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகனப் பழுது நீங்கும். வெகுநாட்களாக போக வேண்டும் என்று நினைத்திருந்த கோவிலுக்குச் சென்று வருவீர்கள். நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு. அண்டை அயலார் உதவுவார்கள்.

குருபகவான் ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியை‌ப் பார்ப்பதால் சோர்ந்திருந்த உங்கள் முகம் மலரும். சுறுசுறுப்படைவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தோல் நோய் குணமாகும். 7-ம் பார்வையால் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் பிறக்கும். இளைய சகோதர வகையில் உதவி உண்டு. 9-ம் பார்வையால் 5-ம் வீட்டை பார்ப்பதால் கனவுத் தொல்லைகள், தூக்கமின்மை, யார் மீதும் நம்பிக்கை இல்லாத நிலை யாவும் நீங்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்கள் ரோக லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்களும், செலவுகளும் ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் புதிதாக டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். மகனுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் சப்தம ஜீவனாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சென்று அமர்வதால் பெயர், புகழ், கௌரவம் குறையும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்துப் போட வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாகன விபத்துகள், உத்யோகத்தில் வீண் பழி, வி.ஐ.பிகளுடன் மோதல்கள், தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உறவினர்களுடன் உரசல்கள் வந்து நீங்கும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் அட்டம பாக்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் உடல் அசதி, சோர்வு, அல்சர் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். இக்கால கட்டத்தில் குருபகவான் 10-ம் வீட்டில் செல்வதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆனால் உங்களைப் பற்றிய வீண் வதந்திகளும் வரும். தந்தையாருடன் கருத்து மோதல் ஏற்படும். சொத்து வாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசி கிட்டும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற நல்ல வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ரியல் எஸ்டேட், ஹோட்டல், எலக்ட்ரிக்கல்ஸ், சிமெண்ட், மணல், கம்பி மூலம் லாபம் வரும். மார்ச், ஏப்ரல், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகத்தில் ஏற்பட்ட அவமானங்கள் நீங்கும். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும் அளவிற்கு அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. அலுவலகத்தில் உங்களை சிலர் சண்டைக்காரர்களாக பார்த்தார்களே! இனி சந்தோஷமாக பேசுவார்கள். ஆனால் 4.5.2010 முதல் 6.11.2010 வரை உங்களின் உத்யோகஸ்தானத்தில் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளுடன் மனத்தாங்கல் வரும். சிலருக்கு இடமாற்றம் வரும்.

கன்னிப்பெண்கள் காதல் கனிந்து வரும். ஊரே மெச்சும்படி கல்யாணம் நடக்கும். தோற்றப் பொலிவு கூடும். உயர்கல்வியை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். மாதவிடாய்க் கோளாறால் ஏற்பட்ட வயிற்று வலி நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். நீங்கள் விரும்பியதை வாங்கித் தருவார்கள்.

மாணவ-மாணவிகளே படிப்பில் இருந்த மறதி, அலட்சியம் இனி விலகும். ஆர்வம் பிறக்கும். உயர் கல்வி வெளிநாட்டில் அமையும். உங்களை விட்டு விலகிய நண்பர்கள் உங்களை‌த் தேடி வருவார்கள். ஓவியம், இசை, கட்டுரை போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு, பழைய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். கிசுகிசுத் தொல்லைகள் குறையும்.

விவசாயிகளே! சூரிய காந்தி, எள், ஆமணக்கு, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் மூலம் அதிக ஆதாயமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்கட்சியில் இருப்பவர்களும் நண்பர்களாவார்கள். தலைமையின் குடும்ப விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

இந்த குரு மாற்றம் வருமானத்தையும், வசதி, வாய்ப்புகளையும் அதிகரிக்க செய்வதுடன் புதிய முயற்சிகளில் வெற்றியையும் அள்ளித் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil