Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : தனுசு

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : தனுசு
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:55 IST)
உடனிருப்பவர்களின் தேவையறிந்து உதவும் குணமுடைய நீங்கள், எல்லையில்லா அன்புகொண்டவர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் குருபவான் அடியெடுத்து வைக்கிறார். ‘தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்’ என்று பழைய நூல்கள் கூறுகின்றது. உங்கள் ராசிநாதனான குரு பகவான் நான்காம் வீடான சுகவீட்டிற்கும் அதிபதியாகிறார். அப்படிப்பட்டவர் மூன்றாம் வீட்டில் சென்று மறைவதால் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட்டு தவறான பாதையில் செல்ல வேண்டாம். பெரியவர்கள்,அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளை காதில் போட்டுக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சலசலப்புகளும்,வாக்குவாதங்களும் வரத்தான் செய்யும். யாரையும் அனாவசியமாக வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். இளைய சகோதரர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ஷேர், லாட்டரியில் ஏமாறவேண்டாம். அன்பளிப்புகளை தவிர்க்கவும்.

என்றாலும் உங்களின் ஏழாவது வீட்டை குரு பார்ப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், பாசத்திற்கும்,பரிவுக்கும் பஞ்சமிருக்காது. தெய்வ பக்தி கூடும். பஜனை, கதாகாலஷேமங்களில் மனம் லயிக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குருபகவான் உங்களின் ஒன்பதாவது வீட்டைப் பார்ப்பதால் செலவுகளை ஓரளவு கட்டுப்படுத்துவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். தந்தையாருடன் அடிக்கடி கருத்துமோதகள் வந்ததே! அது இனி குறையும். பிள்ளைகளிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள் நீங்கும்.

மகனை விரும்பிய கல்விப்பிரிவில் சேர்ப்பீர்கள். மகளுக்கு பல இடங்களில் வரன் பார்த்து அலுத்துப் போனீர்களே! இப்பொழுது உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார். குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் பல நாளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த பிரச்சனைக்கெல்லாம் ஓயும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு நெருக்கமாவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேசவேண்டாம். சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் பூர்வபுண்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனதில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதியுண்டாகும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்கள். வீண் விவாதங்கள், மனப்போராட்டங்கள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். காய்ச்சல், சளித்தொந்தரவு, வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள், வீண்பழி வந்து நீங்கும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தைரியம் பிறக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், செலவும் இருக்கும். உத்‌தியோகத்தில் அலை‌க்கழிக்கப்படுவீர்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் பெருமை தரக்கூடிய சம்பவம் நிகழும். பணப்புழக்கம் ஓரளவு இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலக்கட்டத்தில் குரு பகவான் தன சேவகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் செலவுகள், திடீர் பயணங்கள், வயிற்றுவலி, குடும்பத்தில் வாக்குவாதங்கள், பார்வைக்கோளாறு, வெளிவட்டாரத்தில் சிறு சிறு இழுக்குகள், ஏமாற்றங்கள் வரக்கூடும்.

வியாபாரத்தில் மற்ற வியாபாரிகளை பார்த்து அதிக முதலீடுகளை போட்டு நட்டப்படாதீர்கள். வருங்கால சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். வேலையாட்களுடன் அனுசரித்துப் போங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமையாக பேசவேண்டாம். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் உண்டு. பங்குதாரர்களை அரவனைத்து செல்லப்பாருங்கள். உணவு, ஸ்டேஷ்னரி, கமிசன் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்‌தியோகத்தில் மேலதிகாரியுடன் கருத்து மோதல்கள் வெடிக்கும். ஆனாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் ஒப்படைப்பார்கள். என்றாலும் சக ஊழியர்கள் உங்களை மட்டம் தட்டிப் பேசுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுங்கள். சிலர் வேண்டா வெறுப்பாக இடம் மாற வேண்டி வரும். அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். ஜீன்,ஜீலை, அக்டோபர் மாதங்களில் வேலைச்சுமை குறையும்.

கன்னிப் பெண்களே! காதல் வலையில் சிக்கவேண்டாம். கெட்டவர்கள் அன்பாகப் பேசினாலும் ஒதுக்கித்தள்ளுங்கள். இரும்பு, கால்சீயச் சத்து குறையும். பழ, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களே! வகுப்பறையில் அரட்டை வேண்டாம். தெரியாதவற்றை தயக்கமில்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். உயர்கல்வியில் கூடுதல் அக்கறை எடுக்காவிட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டியது வரும்.

கலைஞர்களே! சின்ன சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய நிறுவன வாய்ப்புகள் தடைபட்டு வரும்.

விவசாயிகளே! வங்கிக் கடனுதவி கிடைக்கும். நவீனரக உரங்களால் விளைச்சல் இரட்டிப்பாகும்.

அரசியல்வாதிகளே! மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். உட்கட்சிப் பூசலில் தலையிடாதீர்கள். சகாக்கள் சிலர் உங்களை குறை சொல்லத்தான் செய்வார்கள்.

இந்த குரு மாற்றம் எதிர்பார்த்ததை தாமதமாக்கினாலும், விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் விட்டதைப் பிடிக்க வைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil