Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம் என்ன ஆச்சு? முக்கிய உத்தரவு..!

Advertiesment
கார்த்திசிதம்பரம்

Siva

, வெள்ளி, 31 அக்டோபர் 2025 (17:59 IST)
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது வங்கி கணக்குகள் மீதான அமலாக்கத்துறையின் முடக்க நடவடிக்கையை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
சொத்து முடக்க நடவடிக்கை ஓராண்டு காலதாமதமாக எடுக்கப்பட்டதால், அதை சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.
 
இதற்கு அமலாக்கத்துறை, இந்த தாமதத்திற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று காலகட்டமே என்று விளக்கம் அளித்தது.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது. அமலாக்கத்துறை அவர் சொத்துகளை முடக்கிய நடவடிக்கை சட்டப்படி செல்லும் என்று உத்தரவு பிறப்பித்து, ED-யின் நடவடிக்கையைச் சரி என்று உறுதிப்படுத்தியுள்ளது. 
 
இந்தத் தீர்ப்பு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பாதையில் செல்லும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!