Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

Advertiesment
சிபிஐ

Mahendran

, திங்கள், 24 நவம்பர் 2025 (12:01 IST)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் இன்று சிபிஐ விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.
 
தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், கரூரில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகளின் முன் ஆஜராகியுள்ளனர்.
 
முன்னதாக சென்னை பனையூர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய சிபிஐ, தற்போது முக்கிய நிர்வாகிகளை கரூர் வரவழைத்து நேரில் விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கு தொடர்பாக பலியானோர் குடும்பத்தினர், காயமடைந்தோர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!