வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குழந்தை சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை வீசிச்சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இறந்த பிறகு வீசப்பட்டதா அல்லது உயிருடன் வீசப்பட்டதா என்பது உடற்கூராய்வின் முடிவில்தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
மருத்துவமனைக்கு அருகிலேயே நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.