Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பன் என்றால் நண்பனாக இருப்போம், துரோகி என்றால் காலில் மிதிப்போம்: செல்லூர் ராஜூ

Advertiesment
அதிமுக

Mahendran

, வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:14 IST)
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற விவாதம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டங்களில் தவெக கொடிகள் காணப்பட்டதையடுத்து, ஈபிஎஸ் 'பிள்ளையார் சுழி' அமைந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுக கூட்டணிக்கு யாருக்காகவும் அலைந்ததாக வரலாறே கிடையாது" என்று தெரிவித்தார். "எங்கள் கொள்கையுடன் ஒத்துப்போய், மக்களுக்கு துணையாக யார் வந்தாலும் அவர்களை மதிப்போம். அதிமுக யாரையும் வலுக்கட்டாயமாக அழைத்தது இல்லை" என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
 
மேலும், நண்பனாக இருந்து துரோகம் இழைப்பவர்களை 'கால் கீழே போட்டு மிதிப்போம்' என்ற அவரது பேச்சு, அதிமுகவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
 
இதற்கிடையே, டிடிவி தினகரன், "விஜய் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் அது தற்கொலைக்கு சமம். விஜய் இணைந்தால், அதிமுக பாஜகவை விட்டுவிடும்" என்று எச்சரிக்கை விடுத்தார். செல்லூர் ராஜுவின் பேச்சு, அதிமுக எந்தக் கட்சிக்கும் கையேந்தவில்லை என்ற செய்தியை தவெக-க்கு உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!