பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி மீது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "உங்களுக்குள்ளேயே ஒற்றுமையுடன் இருக்க முடியாத நீங்கள், பீகாரை எப்படி ஒற்றுமையாக வழிநடத்த முடியும்?" என்று தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களை அவர் கடுமையாக சாடினார்.
மகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறைந்தது பன்னிரண்டு தொகுதிகளிலாவது ஒருவருக்கொருவர் எதிராகவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதனை அவர்கள் ஒரு 'நட்பு ரீதியிலான போட்டி' என்று கூறி சமாளிக்க முயல்கின்றனர்.
மறுபுறம், அமித் ஷா, நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் பிரசாரத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. மகா கூட்டணியில் நிலவும் இந்த பிளவுகளைச் சரிசெய்யும் முயற்சியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் சமாதான பேச்சுவார்த்தைக்காகப் பாட்னாவுக்கு வந்துள்ளார்.
மகா கூட்டணியின் இந்த உள் முரண்பாடுகள், பீகார் தேர்தல் களத்தில் NDA-வுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.