Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

Advertiesment
Tirupati

Mahendran

, வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (14:45 IST)
வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதால், திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 
பாரம்பரிய விதிகளின்படி, கிரகணம் தொடங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். எனவே, செப்டம்பர் 7-ஆம் தேதி மதியம் 3:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். இந்த காலக்கட்டத்தில், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது.
 
செப்டம்பர் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவசனம் சடங்குகள் நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம் போல் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
 
சந்திர கிரகணத்தையொட்டி, செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!