மக்களை காப்பாற்றியதை விட விருது பெரிதல்ல! நோபல் கிடைக்காதது பற்றி மனம் திறந்த ட்ரம்ப்!

Prasanth K
ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (08:41 IST)

சமீபத்தில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காதது பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனம் திறந்துள்ளார்.

 

பல நாட்டு போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்கும் என ட்ரம்ப் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், வெனிசுலா பெண் சமூக செயல்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டது.

 

இதுகுறித்து முதன்முறையாக மனம் திறந்த அதிபர் ட்ரம்ப் “நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் மரியா என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது உங்களுக்கு நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன், நீங்கள்தான் இதற்கு தகுதியானவர் என கூறினார். எனினும் நான் நோபல் பரிசு தாருங்கள் என கேட்கவில்லை. மரியா நோபல் பெறுவது சரியான விஷயம்.

 

ஏனென்றால் அவருடைய போராட்டத்தில் நானும் உதவி செய்து வருகிறேன். லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சியாக உள்ளது. அந்த மனநிலையே போதுமானது” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments