முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

Mahendran
சனி, 22 பிப்ரவரி 2025 (09:28 IST)
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படுவதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அவ்வாறு பெட்டிகள் குறைக்கப்படவில்லை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
 
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை. விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயனடையும் வகையில், பிப்ரவரி மாதம் முதல் பொது பேட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
 மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, தற்போது ஒதுக்கப்பட்ட பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பிப்ரவரி 26 ஆம் தேதி மகா கும்பமேளா நிகழ்வு முடிவடைந்த உடன், மார்ச் மாதம் முதல் இந்த பெட்டிகள் தெற்கு ரயில்வே சார்பில் மீண்டும் இணைக்கப்படும்.
 
மேலும், 14 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், 14 ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பேட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments