டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (12:02 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.
 
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வுகள், சென்னையில் மட்டும் டிசம்பர் 1 முதல் 4 வரையிலும், டிசம்பர் 8 முதல் 10 வரையிலும் முற்பகலில் நடைபெறவுள்ளன.
 
தேர்வுக்கூட நுழைவு சீட்டை, விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -க்கு சென்று, தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்  மூலம், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments