Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (20:14 IST)
சென்னை மற்றும் பிற பகுதிகள் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் 'நியூட்டனின் மூன்றாம் விதி' இயக்குனர் தாய் செல்வா. எஸ்.ஜே. சூர்யா வித்தியாசமான பாத்திரத்தில், வழக்கமான இரண்டு அர்த்த வசனம் எதுவும் இல்லாமல் ஆக்சன் கலந்த காதல் படத்தில் நடிப்பது இது முதல் முறை.

இப்படத்தின் இயக்குனர் தாய் செல்வா. சின்னத்திரையில் பல தொடர்களை இயக்கி பின் பெரிய திரைக்கு வந்த இயக்குனர் சமுத்திரக்கனியிடமும், இதே பாணியில் பெரிய திரைக்கு வந்த 'மெட்டி ஒலி' திருமுருகனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். இந்த இரண்டு இயக்குனர்களின் வழியில் இவரும் ஜெயா டி.வி.யில் 'யார்?' என்ற மர்மத் தொடரை இயக்கிவிட்டு பின் இந்தப் படம் மூலம் பெரிய திரைக்கு வந்திருக்கிறார் தாய் செல்வா என்கிற தாய் செந்தில்குமார்.

இவரின் குருவைப் போல இவரும் வெள்ளித்திரையில் பெரிய வெற்றி பெறவேண்டுமென்றால், சீரியல் பாணியை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். வெற்றி பெற வாழ்த்துவோம். அதேபோல் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இந்தப் படத்தின் மூலமாக ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்தும் வரட்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments