ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

vinoth
சனி, 9 ஆகஸ்ட் 2025 (08:01 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் & பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாகி வருகிறார். இந்திய அணியின் பேட்டிங் பின்வரிசையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் தூக்கி நிறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த தொடரில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில்  ரிஷப் பண்ட்  கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார். ஆனால் அதன் பிறகு தொடரை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பண்ட் குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர் “ரிஷப் பண்ட் போன்றவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிட வேண்டும். யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் தங்களுக்கென திட்டம் வைத்திருப்பார்கள். அதை அவர்கள் செயல்படுத்துவார்கள். ” எனப் பாரட்டிப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பயர் தவறான முடிவால் தோற்றோம்.. கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்த கொல்கத்தா அணி குற்றச்சாட்டு..!

கடைசி பந்தில் ரன் எடுக்காமல் கோட்டை விட்ட டெல்லி.. 1 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி..!

மும்பை தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்டியா தான் ரியல் வின்னர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஆர்சிபி - சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த அனுஷ்கா ஷர்மா.. அணிந்திருந்த டீசர்ட் விலை என்ன தெரியுமா?

ஐபிஎல் போட்டியால் என் கேரியரே போச்சு: கெவின் பீட்டர்சன் பகீர் புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments