Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

Mahendran
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (18:30 IST)
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சமநிலை கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்து ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிளென் மெக்ராத் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 
 
அவர் இது குறித்துப் பேசியபோது, "எங்கள் அணியின் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பாகச் செயல்படும்போது, அது இங்கிலாந்து அணிக்கு மிகவும் சவாலாக இருக்கும். 
 
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்ற புள்ளிவிவரமும் உள்ளது. எனவே, அவர்களால் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற முடியுமா என்று பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்" என்றார்.
 
இங்கிலாந்து அணி கடைசியாக 2010-2011-ஆம் ஆண்டில் ஆஷஸ் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments