அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதிர்ப்பு: நார்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு..!

Siva
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (16:33 IST)
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரிய கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை வெனிசுலா அரசு மூடியுள்ளது.
 
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மச்சாடோ போராடியதை பாராட்டி, நார்வேயின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி அவருக்கு பரிசை அறிவித்தது.
 
இந்த அறிவிப்புக்குப் கடும் எதிர்ப்பு தெரிவித்த வெனிசுலா அரசு, நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக உடனடியாக அறிவித்தது.
 
வெனிசுலா எடுத்த இந்த முடிவால் வருத்தம் தெரிவித்துள்ள நார்வேயின் வெளியுறவு அமைச்சகம், காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், இரு நாடுகளுக்குமிடையே தொடர்ந்து நல்லுறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது. 
 
எதிர்க்கட்சித் தலைவருக்கு நோபல் வழங்கப்பட்ட விவகாரம், இரண்டு நாடுகளின் இராஜதந்திர உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments