ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஒரண்டை இழுத்த பாகிஸ்தான்! - பதிலடி கொடுத்த தாலிபான்!

Prasanth K
ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (09:14 IST)

ஆப்கன் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை தாக்கி பதிலடி கொடுத்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெக்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிரான செயல்பாடுகளை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் நூர் வாலியை குறிவைத்து, அவர் இருந்த ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூலின் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. ஆனால் இதில் நூர் வாலி தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக களமிறங்கிய தாலிபான், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள அவர்களது ராணுவ நிலைகளை தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதலில் 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலியானதாக கூறப்படுகிறது. இரு நாடுகள் இடையே எழுந்துள்ள இந்த மோதல் போராக வெடிக்கலாம் என கருதப்படும் நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

அடுத்த கட்டுரையில்
Show comments