Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடிவாசல் படத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு இயக்குனரோடு கைகோர்க்கும் சூர்யா!

வாடிவாசல் படத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு இயக்குனரோடு கைகோர்க்கும் சூர்யா!
, ஞாயிறு, 22 ஜனவரி 2023 (07:55 IST)
சூர்யா அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி சில இயக்குனர்களை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படம் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து சுதா கொங்கரா மற்றும் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களை எல்லாம் முடித்த பின்னர் சூர்யா, மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூனியர்.என்.டி.ஆரை ஆஸ்கர் போட்டியாளராக இடம்பெற வாய்ப்பு!