Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படம் ட்ராப்… அடுத்து சிவகார்த்திகேயன் பக்கம் நகரும் இளம் இயக்குனர்!

சூர்யா படம் ட்ராப்… அடுத்து சிவகார்த்திகேயன் பக்கம் நகரும் இளம் இயக்குனர்!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:30 IST)
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் ரவிக்குமார். அதன் பின்னர் அவர் இயக்கிய அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தமிழ் திரையுலகின் முதல் டைம் மிஷின் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இப்போது உருவாக்கி வரும் அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளது.

இப்போது அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் ரவிக்குமார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் சிலபல காரணங்களால் இப்போது கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால் இயக்குனர் ரவிகுமார் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து அஜித் படங்களைக் குறிவைக்கும் சிரஞ்சீவி… வேதாளத்தை தொடர்ந்து இந்த படமா?