Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முற்றும் போட்ட பின்னரும் மீண்டும் தொடங்கும் ‘மதராஸி’ ஷூட்டிங்… காரணம் என்ன?

Advertiesment
சிவகார்த்திகேயன்

vinoth

, செவ்வாய், 17 ஜூன் 2025 (11:40 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி படமாக அமைந்தது.

அதையடுத்து தற்போது மதராஸி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் இறுதிகட்டக் காட்சிகள் கடந்த சில வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டன.  தற்போது அந்த படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு பாடல் காட்சியை மீண்டும் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மேலும் சில ஷாட்கள் தேவைப்படுவதால் அதையும் திரும்ப ஷூட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

VJS –பூரி ஜெகன்னாத் இணையும் பேன் இந்தியா படத்தின் கதாநாயகி இவர்தான்!