தமிழ் திரையுலகில் ஒரே ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துவிட்டால், அந்த இயக்குநரை நோக்கி பிரபல நடிகர்கள் படையெடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படித்தான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநரை தேடி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் கதை கேட்டுள்ளதாகவும், "எனக்கு ஏற்ற கதை இருந்தால் சொல்லுங்கள்" என்று வாய் திறந்து கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல், பிரபல தெலுங்கு நடிகர் நானியும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜிவிந்த்தை அழைத்து, தனக்கு பொருத்தமான கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர், தான் இன்னும் அடுத்த படத்தின் கதையை தயார் செய்யவில்லை என்றும், கதையை தயார் செய்துவிட்டு, அதன் பிறகு அந்த கதைக்கு பொருத்தமானவர் யார் என்பதைத் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' தயாரிப்பு நிறுவனத்திற்கே அவர் அடுத்த படத்தையும் இயக்க போகிறார் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.