தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம் படுதோல்வி படமாக அமைந்தது.
அதையடுத்து தற்போது மதராஸி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் இறுதிகட்டக் காட்சிகள் கடந்த சில வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டன. தற்போது அந்த படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
மதராஸி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இலங்கையில் நடந்தது. அங்கு கப்பல் துறைமுகத்தில் காட்சிகளை இரண்டு வாரங்கள் நடத்தியுள்ளார் முருகதாஸ். அந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. ஆனாலும் சிரமங்களைப் பார்க்காமல் படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைக்க படத்தின் காட்சிகளை எடுத்து முடித்து இந்தியா திரும்பியுள்ளார் முருகதாஸ்.