தமிழ் சினிமாவில் இரட்டை இசையமைப்பாளர்களாக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வந்தவர்கள் சங்கர் –கணேஷ். இதில் சங்கர் ஏற்கனவே காலமாகிவிட்டாலும் இன்னமும் சங்கர் கணேஷ் என்ற பெயரிலேயே தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார் கணேஷ்.
இந்நிலையில் நேற்று அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான ஸ்ரீ பேசியுள்ளார்.
அதில் “எங்கள் அப்பாவுக்கு இதய பிரச்சனை உள்ளது. அதனால் மருத்துவர்கள் அவரைப் பாடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் மேல் உள்ள பாசம் காரணமாக திமுகவின் முப்பெரும் விழாவில் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார். அதற்கான ஒத்திகையில் ஈடுபட்ட போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.