Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5வது மாதத்தில் கருச்சிதைவு.. சிதைந்த கருவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் கொடுத்த பெண்..!

Advertiesment
AIIMS

Mahendran

, திங்கள், 8 செப்டம்பர் 2025 (11:02 IST)
டெல்லியை சேர்ந்த 32 வயதுப்பெண் ஒருவர், தனது ஐந்தாவது மாதத்தில் ஏற்பட்ட கருச்சிதைவுக்கு பிறகு, மருத்துவ ஆய்வுக்காக கருவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமளித்துள்ளார். 
 
டெல்லியின் பிதாம்பூராவை சேர்ந்த வந்தனா ஜெயின் என்ற பெண் கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் கருச்சிதைவை சந்தித்தார். இந்த துயரமான தருணத்திலும், மருத்துவ உலகிற்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், தனது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கருவை தானம் செய்ய முடிவு செய்தார்.
 
அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கரு, எய்ம்ஸ் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எடுத்து செல்லப்பட்டது. இந்த கரு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பயிற்சி மற்றும் ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த துயரமான சூழலிலும், வந்தனா ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்த இந்த மனிதாபிமானமான முடிவு, மருத்துவ ஆய்வுகளுக்கு ஒரு சிறந்த பங்களிப்பாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இன்று விருந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!