Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமர்சனங்கள்தான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கின்றன… சாய் அப்யங்கர் பாசிட்டிவ் பேச்சு!

Advertiesment
ஸ்பாட்டிஃபை

vinoth

, புதன், 19 நவம்பர் 2025 (14:10 IST)
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ மற்றும் ‘சித்திரி புத்திரி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்துக்கும் அவர்தான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தமிழில் அவரின் முதல் படமாக ‘டியூட்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தின் ஹிட்டானது போல கடுமையான கேலி மற்றும் விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் கேலி மற்றும் விமர்சனம் குறித்துப் பேசியுள்ள சாய் ”விமர்சனங்கள்தான் என்னைக் கடுமையாக உழைக்க வைக்கின்றன. என் முதல் இரு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அடுத்தடுத்து வரும் படங்களிலும் நான் கடுமையாக உழைத்து என்னை நிரூபிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த ஆர் ஜே பாலாஜி!