ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைப்பதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் 90 களில் நடப்பது போல உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.