சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள அரசன்படத்தின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இந்த முன்னோட்டக் காட்சியிலேயே வட சென்னை உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
மேலும் முதல் முறையாக வெற்றிமாறன் படத்துக்கு அனிருத் இசையமைப்பதால் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அனிருத்துக்கு சம்பளமாகப் பணம் கொடுக்காமல் ஆடியோ உரிமம் மொத்தத்தையும் அனிருத்துக்குக் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர் தாணு.