Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

Advertiesment
லைகர்

vinoth

, வியாழன், 20 நவம்பர் 2025 (08:06 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

அதே போல கன்னட சினிமாவில் தன்னுடையத் திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக ‘நேஷனல் க்ரஷாக’ உள்ளார். இருவரும் கீதகோவிந்தம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இருவரும் அவ்வப்போது ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்தனர். சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை வெளிப்படையாக அவர்கல் இருவரும் தங்கள் காதலை அறிவிக்கவில்லை. இந்நிலையில் ராஷ்மிகா தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “எனக்குக் கணவராக வருபவர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.  சூழ்நிலைகளை புரிந்துகொள்ளும் ஒருவராக இருக்க வேண்டும். நாளைக்கு எனக்கு எதிராக ஒரு போர் நடந்தால் எனக்காகப் போராடுபவராக இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!