பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றிப் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரஷாந்த் கிஷோர் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
தங்கள் கட்சி தேர்தலில் சந்தித்த தோல்வி குறித்து பேசிய பிரஷாந்த் கிஷோர், "நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.
"பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக பங்களித்தோம். ஆனால், பொதுமக்கள் எங்களை தேர்ந்தெடுக்காததற்கு, நாங்கள் மக்களிடம் விளக்கிய விதத்தில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால், அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையதே.
"நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு. நாங்கள் மீண்டும் அதே சக்தியுடன் நிற்போம்."
நிதிஷ்குமார், 1.5 கோடி பெண்களுக்கு தான் உறுதியளித்த ரூ. 2 லட்சத்தை மாற்றி, வாக்குகளை பெற்று வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்தால், நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்."