Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

Advertiesment
மிஷ்கின்

vinoth

, வெள்ளி, 13 ஜூன் 2025 (10:00 IST)
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மிஷ்கின் இயக்கிய படம் ஒன்று ரிலீஸாகி கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் இயக்கிய பிசாசு 2 மற்றும் டிரைன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளன. இதற்கிடையில் மிஷ்கின் நடிகராக அறிமுகமாகி நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் நடிகனாக இருப்பது சலிப்பைத் தருவதாக மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “எனக்கு நடிப்பது பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு தினமும் 10 அழைப்புகள் நடிக்க வருகின்றன. அதை தவிர்ப்பதற்காக நான் அதிக சம்பளம் கேட்கிறேன். ஆனால் அதையும் தரத் தயாராக இருக்கிறார்கள். என்னுடைய நடிப்பு இன்னும் கொஞ்ச காலத்தில் ரசிகர்களுக்கு சலிப்பைத் தந்துவிடும் என நினைக்கிறேன். அதன் பின்னர் நான் முழுவதுமாக இயக்கத்தில் இறங்கிவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அகமதாபாத் கோர விபத்து காரணமாக ‘கண்ணப்பா’ டிரைலர் ரிலீஸ் தள்ளிவைப்பு!