வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது வெங்கட் பிரபு ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இந்த படம் டைம் டிராவல் ஜானரில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறகனவே சிவகார்த்திகேயன் அயலான் படத்திலும் வெங்கட்பிரபு தி கோட் படத்திலும் அறிவியல் புனைகதை வகையில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.