Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெடு வைத்து படம் எடுக்கும் மிஷ்கின்!

கெடு வைத்து படம் எடுக்கும் மிஷ்கின்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:06 IST)
வரும் 18 ஆம் தேதிக்குள் பிசாசு படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பை முடிக்க இயக்குநர் மிஸ்கின் திட்டமிட்டிருக்கிறார். 

 
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்து வருகிறார்.
 
இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் படமாக்கி விட்டாராம். இன்னும் கிளைமேக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படவில்லையாம். இந்நிலையில் இந்த பணிகளை வரும் 18 ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் மிஸ்கின் திட்டமிட்டிருக்கிறார். அதன்பின் உடனடியாக இறுதிக்கட்ட பணிகளை தொடங்கவும் மிஷ்கின் முடிவு எடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனரை நம்பாத ஏஜிஎஸ் நிறுவனம்… ரஜினி எடுத்த முடிவு!