மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

vinoth
வியாழன், 27 நவம்பர் 2025 (14:58 IST)
பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் அப்போதைய பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சகலகலா வல்லவன்’ படத்தின் வசூலையே முறியடித்ததாக சொல்லப்படுவதுண்டு.

இந்த படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இந்நிலையில் இந்த படத்தின் டைடில் கார்டில் இடம்பெறும் ‘வெளக்கு வச்ச நேரத்துல’ பாடலுக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யமானக் கதையை பாக்யராஜ் தற்போது ஒரு நேர்காணலில் வெளியிட்டுள்ளார். அதில் “முதலில் அந்த பாடலில் பல்லவி ‘அருவிக் கர ஓரத்தில நீராடினோம்’ என்றுதான் இருந்தது. ஆனால் எனக்கு அந்த வரிகள் பிடிக்கவில்லை. பாடர் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்த போது எனக்குத் திடீரென வரிகள் தோன்றின.

உடனே பேப்பரில் “வெளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்.” என்ற பல்லவி தோன்றியது. அதை இளையராஜாவிடம் கொடுத்தேன். அவர் வரிகளைப் பார்த்துவிட்டு “மால போட்ட நேரத்துல ஏன் இத மாதிரி வரிகளை எல்லாம் பாட சொல்றீங்க?” என்றார். ஆனால் எனக்கு இந்த வரிகள் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. அவரைப் பாட வைத்தேன். இறுதியில் அவர்களை வரிகளை மறந்துவிட்டு ‘தந்தானனா” என பாடிவிட்டார். அது கூட இன்னும் சிறப்பாக இருக்கும் என அதையே வைத்துக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை சம்யுக்தாவுக்கு 2வ்து திருமணம்.. மணமகன் கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவரா?

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments