துல்கர் சல்மான் தயாரிப்பில் டாம்னிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று அதன் பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டு கேரளா தாண்டி பேன் இந்தியா அளவில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் தற்போது வரை 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் கணிசமான திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லோகா படத்துக்குப் பின்னால் ஒரு அபாயம் உருவாகியுள்ளது என ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். அதில் “லோகா படம் இப்போது பெரிய வெற்றி பெற்றுவிட்டது. அதனால் இப்போது சூப்பர் ஹீரோ படங்களாக எடுக்க வேண்டிய அழுத்தம் உருவாகும். ஆனால் வேறு வேறு ஜானர்களில் படங்கள் வர வேண்டும். அதுதான் நல்லது. நானும் அப்படிதான் பல ஜானர்களில் படங்கள் எடுக்க முயல்கிறேன் எனப் பேசியுள்ளார்.