முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை கெளசல்யா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான 'கார்த்திகை தீபம்' தொடரில் இணைந்துள்ளார்.
'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தளபதி விஜய் உடன் 'பிரியமுடன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகு, 'சுந்தரி', 'அலைபாயுதே' போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
டி.ஆர்.பி.யில் முன்னணியில் உள்ள 'கார்த்திகை தீபம்' தொடரின் இரண்டாவது பாகத்தில், கெளசல்யா ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்திக் ராஜு, ஆர்த்திகா, ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடிக்கும் இத்தொடரில் கெளசல்யாவின் வருகை, ரசிகர்களின் கவனத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.