களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.
இந்நிலையில்தான் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடித்த போகுமிடம் வெகுதூரமில்லை மற்றும் சார் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இந்நிலையில் விமல் நடிப்பில் அடுத்து பரமசிவன் பாத்திமா படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
அதையொட்டி அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் சமூகவலைதளங்களில் தன்னை கேலக்ஸி ஸ்டார் என அழைப்பது பற்றி பேசியுள்ளார். அதில் “என்னை கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி ஓட்ரானுங்கன்னு நெனைக்குறேன். எனக்கு அந்த டைட்டில்ல விருப்பம் இல்ல. அப்படி டைட்டில் போடாலாமான்னு ஒரு படத்துலக் கூட கேட்டாங்க. என்னை ஓட்றதுக்காக அப்படி சொல்றாங்க. அதப் போயி போடணும்னு சொல்றீங்கன்னு சொல்லிட்டேன்” எனக் கூறியுள்ளார்.