Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Mahendran
புதன், 6 ஆகஸ்ட் 2025 (16:12 IST)
ஐந்து மாதங்களில் ஐந்து போர்களை நிறுத்தியுள்ளேன்" என்று அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பெருமை பேசும் நிலையில், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோருக்கு இடையிலான வார்த்தை போரை நிறுத்தியது டிரம்ப் தான் என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முடிவில், மைக்கேல் வாகன், இந்திய அணியை வம்பிழுக்கும் விதமாக ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். ஆனால், இந்தியா வெற்றி பெற்றவுடன், வாசிம் ஜாபர் பதிலுக்கு மைக்கேல் வாகனுக்கு பதிலடி கொடுத்து சீண்டினார்.
 
இந்த விவாதத்தை கண்ட நெட்டிசன்கள், "இந்த வார்த்தை போரை டிரம்ப் தான் நிறுத்தியிருப்பார்" என்று கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில், "வாசிம் ஜாபர், எனக்கும் வாகனுக்கும் இடையேயான சண்டையை நிறுத்த டிரம்ப் தான் உதவினார் என்று வெளியான செய்திகள் ஆதாரமற்றவை" என்று நகைச்சுவையாக பதிவிட்டார்.
 இதை தொடர்ந்து, "டிரம்ப் நிறுத்திய ஆறாவது சண்டை இதுதான்" என்று பலர் கேலி செய்து வருகின்றனர்.
 
உலகில் எங்கு போர் நடந்தாலும், அந்த போரை நிறுத்தியதாக தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் டிரம்ப்புக்கு, இந்தச் சம்பவத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments