சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

Siva
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (17:57 IST)
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அடுத்த ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி வேறு அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
2025 ஐபிஎல் ஏலத்தில் ₹9.75 கோடிக்கு அஸ்வினை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. தற்போது, அவரே அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து விலக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அஸ்வினும் வெளியேற இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
சிஎஸ்கே அணியில் உள்ள ஒரு  தமிழர் என்ற பெருமையுடன் அஸ்வின் அணியில் இருந்த நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments