Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிஷப் பண்ட் இடத்திற்கு தகுதியானவர் இவர் தான்: தினேஷ் கார்த்திக் கருத்து..

ரிஷப் பண்ட் இடத்திற்கு தகுதியானவர் இவர் தான்: தினேஷ் கார்த்திக் கருத்து..
, புதன், 5 ஜூலை 2023 (16:31 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயமடைந்து குணமாகி வரும் நிலையில் அவரது இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர் ஒருவர் தான் என தினேஷ் கார்த்திக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆண்டு உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ரிஷப் பண்ட் பதிலாக விளையாட போகும் வீரர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 
 
இது குறித்து பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக் ரிஷப் பண்ட் இடத்திற்கு தகுதியானவர் கே எல் ராகுல் தான் என்று கூறியுள்ளார். கேஎல் ராகுல், ரிஷப் இடத்திற்கு சரியான நபராக இருப்பார் என்றும் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட கூடியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், மற்றும் கேஎல் ராகுல் ஆகிய மூவரில் ஒருவர் வரும் உலக கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராக இருப்பார்கள் என்று கூறப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை… இந்தியா ஏ அணி அறிவிப்பு!